திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அணி மற்றும் பிரிவுகளுக்கு புதிய மாவட்ட தலைவர்களை பாஜக மாநில தலைமையின் ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக கிஷோர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிஷோர் குமார் அவர்களை பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் பாஜக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள், நண்பர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், மாவட்ட இளைஞரணி தலைவராக நவீன் குமார், மகளிர் அணி தலைவியாக கீர்த்தி செல்வமூர்த்தி, விவசாய அணி தலைவராக பிரகாஷ், சிறுபான்மை அணி தலைவராக முகமது யாசின், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக சதீஷ்,
சமூக ஊடக பிரிவு தலைவராக சிவசுப்பிரமணியம், ஊடகப்பிரிவு தலைவராக பூபதி, மருத்துவப் பிரிவு தலைவராக ராஜா ஹரி கோவிந்தன், கூட்டுறவு பிரிவு தலைவராக சிவகுமார், கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக நடராஜ், வர்த்தகர் பிரிவு தலைவராக முரளிதரன்,
அரசு தொடர்பு மற்றும் மத்திய நல திட்டங்கள் பிரிவு தலைவராக திருமாறன், ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு தலைவராக திருமதி அனுஜா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவராக சீனிவாசன், பிரச்சார பிரிவு தலைவராக ஆறுமுகம் ,
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு தலைவராக ரவி உள்ளிட்டோரும் மேலும் பல அணி மற்றும் பிரிவுகளுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அணி மற்றும் பிரிவுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களை மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.




