Close
மார்ச் 7, 2026 6:03 மணி

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: வேலூர் சரக டிஐஜி ஆய்வு

கோயிலில் ஆய்வு செய்த டிஐஜி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா பாதுகாப்புக்கு முன்னேற்பாடு குறித்து வேலூர் சரக டிஐஜி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது, அதற்குண்டான பூர்வாங்க பணிகள் பந்தல் அமைத்தல் க்யூ லைன் அமைத்தல் சாமி புறப்படும் வாகனங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் ஆய்வு மேற்கண்டார்.

அப்போது, தீபத் திருவிழாவின் போது அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை பொருத்துதல், பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள் , பக்தர்கள் இலவச தரிசனம் செய்யக்கூடிய இடம் மற்றும் தினம்தோறும் சாமி புறப்பாடு செய்யக்கூடிய இடம், பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய இடம், அதே போன்று எந்தெந்த இடங்களில் பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களில் எவ்வாறு நெரிசலின்றி தவிர்ப்பது, திருக்கார்த்திகை தீப திருவிழா நாட்களில் வரக்கூடிய பக்தர்கள் எந்த வித சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம் என்பதால், கோயில் உள்பிரகாரம் மற்றும் மாத வீதி கிரிவலப்பாதை போன்ற இடங்களில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top