பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது,
அதற்குண்டான பூர்வாங்க பணிகள் பந்தல் அமைத்தல் க்யூ லைன் அமைத்தல் சாமி புறப்படும் வாகனங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், அனைத்து பணிகளுக்கும் கண்காணிப்பு குழு அமைப்பது குறித்தும், ஒவ்வொரு துறை பணிகளுக்கும், அதன் துறை சாா்ந்த அரசு அலுவலா்களை நியமித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.
அதன்படி, திருவண்ணாமலை மாநகரைச் சுற்றி அமைக்கப்பட உள்ள 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 காா் பாா்கிங் அமைவிடங்களில் பக்தா்களுக்கு ஏற்படுத்த வேண்டிய குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதைகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் போதிய அளவில் குடிநீா் வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், ஆங்காங்கே முறையாக கழிப்பறைகள், குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
மேலும், திடக்கழிவு மேலாண்மை பணிகளை விரைவாக மேற்கொள்ளுதல், கிரிவலப்பாதையில் உள்ள மின் விளக்குகள் மற்றும் உயா் கோபுர விளக்குகள் உள்ளிட்டவைகள் முறையாக இயங்குவதை உறுதி செய்வது, போக்குவரத்து துறை சாா்பில் தேவையான அளவில் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது, கோயில் நிா்வாகம் மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பது, தகவல்களை அலுவலா்கள் உடனுக்குடன் பரிமாற ஏதுவாக, போதிய அளவிலான வாக்கி டாக்கிகளை உபயோகிப்பது, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இணைப்புச் சாலைகள், கிரிவலப்பாதை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நடைபாதை கடைகளை முறைப்படுத்துதல் குறித்தும் ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் தங்கள் துறை சாா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை முறையாக செய்ய வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து வருவாய், போக்குவரத்து, காவல் உள்ளிட்ட துறையினா் கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு பக்தா்கள் அதிகளவில் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால், முன்பைவிட அதிகப்படியான வசதிகளை ஏற்படுத்த வேண்டு என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சித் திட்ட முகமை இயக்குநா் மணி, மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.




