இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை கிடைக்காததற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெற்றியாளரான வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தன்னை அழைத்து, அவருக்கு “கௌரவமளிக்கும் விதமாக” பரிசை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.
மச்சாடோ தனது அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் அர்ப்பணிப்பதாக எக்ஸ் பதிவில் கூறினார்
இது குறித்து டிரம்ப் கூறியதாவது: உண்மையில் நோபல் பரிசைப் பெற்ற நபர் என்னை அழைத்து, “நீங்கள் உண்மையிலேயே இதற்கு தகுதியானவர் என்பதால், உங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
“அப்போ எனக்குக் கொடுங்கன்னு நான் சொல்லவில்லை. அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். அவர் ரொம்ப நல்லவராக இருந்தார். நான் அவருக்கு உதவி செய்து வருகிறேன் என்று டிரம்ப் தமாஷாக கூறினார்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறுகையில், இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான ஒப்பந்தம் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தம் உட்பட உலகம் முழுவதும் எட்டு அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டேன் என்று கூறினார்
இந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நான்கு நாள் இராணுவ மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்காக டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறினாலும், இந்தியா அந்தக் கூற்றை பலமுறை நிராகரித்துள்ளது.




