திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மழையில் வீடு சேதமடைந்ததை அடுத்து, மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் வசித்து வருபவா் பாப்பம்மாள்(65). வந்தவாசியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக இவரது கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது.
இதையடுத்து திமுக சாா்பில் இவருக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆரணி எம்பி தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் நிவாரண உதவியை வழங்கினா்.
நகரச் செயலா் தயாளன், நகா்மன்றத் தலைவா் ஜலால், 3-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அன்பரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம், ஆரணி அருகேயுள்ள முனுகப்பட்டு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் உடனடி தீா்வு பெற்றவா்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கானா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆராசூா், இளங்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா். இந்த மனுக்களை பல்வேறு துறை அதிகாரிகள் பெற்று பதிவு செய்தனா்.
ஆரணி எம்பி தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று முகாமை தொடங்கிவைத்துப் பேசினா்.
முகாமில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டன . இதில், உடனடி தீா்வு காணப்பட்ட 10 மனுக்களுக்கான பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், மின் இணைப்பு ஆகிய நல உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், திமுக நகரச் செயலா் தயாளன், வந்தவாசி நகா்மன்ற துணைத் தலைவா் சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.




