Close
மார்ச் 7, 2026 3:27 மணி

ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு சேவூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலை வகித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆரணி வட்டம் முள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உடல் எடை, ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உட்டச்சத்து உணவு குறித்தும், ஆர்பிஎஸ்கே குழுவின் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் முள்ளிப்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் காமக்கூர் முதல் முள்ளிப்பட்டு வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ஆரணி நகராட்சி நடுநிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும் , மாணவ மாணவிகள் கற்றல் திறன் மற்றும் வாசித்தல் திறன் குறித்தும், ஆரணி நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிதியின் கீழ் ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் சூரிய குளம் புனரமைக்கும் நடைபெற்று வருவதையும், ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் 15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ஆரணி அரசு மருத்துவமனையில் உ ள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும், விஷக்கடி மற்றும் நாய் கடிக்கான மருந்துகள் இருப்பு குறித்தும், மருந்து பொருட்களின் பதிவேடுகளையும் ஆய்வு செய்து அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் ஆரணி கோட்டை மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆரணி நகராட்சி சேவூர் தனியார் திருமண மண்டபத்தில் செயல்படுத்தப்படும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தள ஆய்வுகள் குறித்து அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுடனும் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில் , தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் அரசினுடைய பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டம் மக்களை முறையாக சென்றடைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

நமது மாவட்டத்தில் இதுவரை நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டும் 50 ஆயிரம் ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது, அதில் 38 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது, மீதமுள்ள மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரோக்கியமான சமுதாயம் மட்டும் தான் ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கும் ஆரோக்கியமான சமூகத்திற்கும் வழி வகுக்கும். அந்த வகையில் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் தமிழ்நாடு முதலமைச்சரால் நலம் காக்கும் ஸ்டாலின் என்கிற முகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்த முகாம்களில் முதன்மை மருத்துவர்களை கொண்டு பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகிறது, பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, ஆரணி நகர மன்றதலைவர் மணி, இணை இயக்குநர் (வேளாண்மை). கண்ணகி மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top