திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் .கிஷோர்குமார், மற்றும் மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் பாஜக மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக இனிப்புகளையும் அன்னதானம் வழங்கியும் மாவட்ட அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டார்கள்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் ரமேஷ் வழங்கினார்.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையிலுள்ள பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா, தெற்கு மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாஜக அலுவலகம் எதிரிலுள்ள ஶ்ரீ வள்ளி தெய்வாணை சமேத சுப்பிரமணியர் கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனா ர் நாகேந்திரன் நீடூழி வாழ வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தெற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கவிதா பிரதீஷ், ஜெய்நாத், செங்கம் ரமேஷ், மாவட்ட துணை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபாசங்கர், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர்குமார், மாநில பிரிவு பொறுப்பாளர்கள், மாவட்ட அணிகள் மற்றும் பிரிவு தலைவர்கள், மண்டல தலைவர்கள், முன்னாள் மண்டல தலைவர்கள், மாநகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.





