Close
மார்ச் 7, 2026 7:19 மணி

பாரிஸ் ஏன் ‘விளக்குகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது?

பாரிஸ் நகரம் ‘விளக்குகளின் நகரம்’  என்று அழைக்கப்படுவதற்கு பாரிஸ் ‘விளக்குகளின் நகரம்’ என்று அழைக்கப்படுவதற்கு பல  காரணங்கள் உள்ளன அறிவு, புதுமை மற்றும் அற்புதமான தெரு விளக்குகள் எனப் பல காரணங்கள் ஒன்றிணைந்துதான் இந்தப் பெயரைப் பாரிஸ் பெற்றது.

விளக்குகளின் நகரம் என்ற இந்தப் பட்டத்தின் ஆழமான பொருள் கி.பி. 18ம் நூற்றாண்டில், அறிவொளி யுகத்தில் இருந்து வந்தது.  அந்தக் காலகட்டத்தில் பாரிஸ், அறிவு மற்றும் தத்துவ சிந்தனையின் முக்கிய மையமாக இருந்தது. வால்டேர், ரூசோ, மற்றும் டிடெரோட் போன்ற புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் பாரிஸில் வாழ்ந்தனர்.

‘விளக்குகள்’ என்ற சொல், மின்விளக்குகளை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, அறிவு, கல்வி, பகுத்தறிவு மற்றும் சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றை குறித்தது. பாரிஸ், ஐரோப்பாவின் அறிவையும் முன்னேற்றத்தையும் பரப்பும் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது.

தெரு விளக்குகளின் முன்னோடி

உலகின் முதல் நகரங்களில் ஒன்றாகப் பாரிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட தெரு விளக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது அதன் புனைப்பெயருக்கு ஒரு நேரடி அர்த்தத்தைக் கொடுத்தது.

இந்தத் திட்டம், 14ம் லூயிஸ் மன்னரின் ஆட்சியின் கீழ் 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அவர் ஆயிரக்கணக்கான முக்கியத் தெருக்களில் விளக்குகளைத் தொங்கவிட உத்தரவிட்டார்.

கி.பி. 1820-களின் முற்பகுதியில், பாரிஸ் ஐரோப்பாவில் கேஸ் விளக்குகளைப் பயன்படுத்திய முதல் முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறியது. 50,000-க்கும் மேற்பட்ட கேஸ் விளக்குகள் அதன் தெருக்களை ஒளிரச் செய்தன.

இது பாரிஸை இரவில் பாதுகாப்பானதாகவும், துடிப்பானதாகவும், முன்னேற்றம் மற்றும் நவீனத்துவத்தின் அடையாளமாகவும் மாற்றியது. இது பிற ஐரோப்பிய தலைநகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது.

இரவில் ஒளிரும் கட்டிடக்கலை அதிசயம்

இன்று, நவீன எல்இடி விளக்கு அமைப்புகளுடன் பாரிஸ் இந்த ஒளியின் பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

ஈபிள் கோபுரம் மட்டுமல்ல, ஆர்க் டி ட்ரையம்பே, லூவ்ரே அருங்காட்சியகம் மற்றும் நோட்ரே-டேம் கதீட்ரல் உள்ளிட்ட 290-க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் ஒவ்வொரு மாலையும் ஒளிர்கின்றன.

பாரிஸின் மிகவும் பிரபலமான அடையாளமான ஈபிள் கோபுரம், ஒவ்வொரு இரவும் 20,000 மின்னும் பல்புகளால் ஒளிர்கிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் இது ஜொலிக்கிறது.

ஈபிள் கோபுரத்தின் இந்த ஜொலிப்பும், நகரத்தின் ஒட்டுமொத்த ஒளியூட்டமும் சேர்ந்து, பூமியின் மிகவும் ரொமாண்டிக்  இரவுக் காட்சிகளில் ஒன்றை உருவாக்குகின்றன.

இது தவிர , லூவ்ரே அருங்காட்சியகம் மற்றும் மியூசி டி’ஓர்சே போன்ற உலகப் புகழ்பெற்ற கலைக்கூடங்கள், ஃபேஷன் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றால் பாரிஸ் உலக அரங்கில் தனது பிரகாசத்தை மேலும் அதிகரிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top