Close
மார்ச் 7, 2026 2:52 மணி

திருவண்ணாமலை மாநகராட்சி வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா்

தமிழக அரசின் உத்தரவின் படி நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.

அதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். .

மேலும், குடிநீர் வழங்கல், தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி, மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பு, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள், மாநகர பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் நடந்தது. மேலும், மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து விளக்கினர். அதோடு, வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை அருணகிரிபுரம் முதல் தெருவில் 39-ஆவது வாா்டு அளவிலான சிறப்புக் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் பேசுகையில், கூட்டத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு பேசியதாவது: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகின்றது.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட 39-ஆவது வாா்டு பகுதிக்கான சிறப்பு வாா்டு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் உள்ளாட்சிப் பகுதிகளில் மக்களுடைய தேவைகளை கண்டறிந்து அது குறித்து நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே.

இந்தப் பகுதிகளின் தேவைகளையும் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் அரசு அதிகாரிகளுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்க இக்கூட்டத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றாா்.

தீா்மானங்கள்

39-ஆவது வாா்ட்டில் உள்ள மரநாய்கன்குட்டையை தூா்வாரி நீா்வரத்துக் கால்வாயை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி மணியாரி தொடக்கப் பள்ளி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். ஹைடெக் நகா், சந்தோஷ் நகா், கோபி நகா், கணேசபுரம், கரியான்சட்டி தெரு ஆகிய பகுதிகளில் கூடுதலாக மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதியை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன், வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top