நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள நிரந்தரமாக நிழல் படிந்த பள்ளங்களில் நீர் பனிக்கட்டி இருப்பதற்கான சக்திவாய்ந்த ரேடார் படங்களை இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.
சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள ரேடார் கருவியிலிருந்து பெறப்பட்ட படங்களைக் கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள், நிலவின் மேற்பரப்பில் மட்டுமின்றி, அதன் மேற்பரப்பிற்குக் கீழேயும் நீர் பனிக்கட்டியின் இருப்பு அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த ஆய்வு முடிவுகளின்படி, நிலவின் துருவப் பகுதிகளில் முதல் சில மீட்டர்களுக்குள் கீழே உள்ள நீர் பனியின் அளவு, மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டியை விட 5 முதல் 8 மடங்கு அதிகமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில், நிலவின் வட துருவப் பகுதியில் காணப்படும் நீர் பனிக்கட்டியின் அளவு, தென் துருவத்தில் உள்ள அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நீர் பனிக்கட்டியின் முதன்மை ஆதாரம், பழங்கால அம்பிரியன் காலத்தின் எரிமலைச் செயல்பாடுகளின் போது ஏற்பட்ட ‘வெளியேற்றம்’ (காரணமாக இருக்கலாம் என்றும், மேலும் இது விண்கல் மோதல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சந்திரயான்-2 ஆர்பிட்டரின் இந்தக் கண்டுபிடிப்புகள், நிலவின் துருவப் பகுதிகளில் நீர் ஆதாரம் கணிசமான அளவில் இருப்பதைக் காட்டுகின்றன. இந்தத் துல்லியமான தகவல்கள், எதிர்காலத்தில் நிலவில் நிலையான மனித இருப்பிடத்தை அமைப்பது மற்றும் அங்குள்ள வளங்களைப் பயன்படுத்துவது குறித்த இஸ்ரோவின் திட்டங்களுக்கும், குறிப்பாக நிலவிற்கு சென்று ஆய்வு செய்யும் பணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமையும்.




