திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் இணையதளம் செயலி மூலம் சரியான முறையில் பணியாற்றுகிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது,
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் சரியான முறையில் பதிவு செய்யப்படுகிறதா, பதிவு செய்யும் அனைத்தும் சரியாக பதிவாகிறதா, ஆப் மூலம் பதிவு செய்யும் அனைத்தும் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும்,
திருத்தங்கள் அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும், அதேபோல் பூர்த்தி செய்த படிவத்தை பார்த்து தவறாக இருந்தால் திருத்தம் செய்து உடனடியாக சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும்,
சரியான முறையில் பதிவு செய்த படிவங்களை க்யுஆர் ஸ்கேன் செய்து திருத்தங்களை சரியாக இருக்கிறதா என்பதை பதிவு செய்ய வேண்டும், ஸ்கேன் செய்தவுடன் சிவப்பு கலரில் பிரதிபலிக்கும், அதன் பின்னர் ஸ்கேன் செய்து பதிவு செய்தவுடன் ப்ளூ வண்ணத்தில் மாறிவிடும்.
அந்த படிவத்தில் பூர்த்தி செய்யும்போது அப்பா பெயர் மற்றும் அம்மா பெயர் ஆதார் அட்டையின் தொலைபேசி எண் மனைவி மற்றும் கணவர் பெயர்கள் சரியாக பதிவு செய்ய வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையின் மற்றும் உறவினர் அடையாள அட்டையினை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும்.
2002ல் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்த்து பதிவு செய்ய வேண்டும், அப்படி இருந்தால் சரியான முறையில் பதிவு செய்து திருத்தம் செய்து பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை பெறும் பொழுது சரியான முறையில் அனைத்தும் பதிவாகி உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
மேலும் இணையதளத்தில் பதிவு செய்யும் அனைத்தும் சரியான முறையில் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் செந்தில்குமரன், தாசில்தார் தேன்மொழி, சமூக பாதுகாப்பு அலுவலர் கௌரி, துணைதாசில்தார் காசி, வருவாய் ஆய்வாளர் சுதாகர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.




