Close
மார்ச் 7, 2026 3:36 மணி

தென்காசியில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலகளவில் மக்களை அதிகளவில் பாதித்து வரும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தென்காசியில் தனியார் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தினம் விழிப்புணர்வு தினமாக நடத்தப்பட்டது.

திராவிடர் கழக தென்மண்டல அமைப்பாளர் டேவிட் செல்லத்துரை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். திமுக மருத்துவரணி துணை அமைப்பாளர் மருத்துவர் அன்பரசன் வரவேற்புரை வழங்கினார்.

மருத்துவர் செல்வரங்கராஜ் நீரிழிவு பற்றியும், மருத்துவர் தமிழரசன் நீரிழிவு நோய் வருமுன் காப்போம் குறித்தும். மருத்துவர் கௌதமி தமிழரசன் நீரிழிவு நோயின் சித்த மருத்துவம் குறித்தும் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நீரிழிவு நோயாளிகள் தங்களை எவ்வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் பல்வேறு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு அதில் விளக்கப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு, அங்கிருந்த மருத்துவர்கள் அதற்கான விரிவான விளக்கங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர்.

விழாவில் நர்ஸிங் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவிகள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விழாவில் தீர்வுகள் வழங்கப்பட்டது.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆண்டுதோறும் மருத்துவமனை சார்பில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இறுதியில் மருத்துவர் சுரேஷ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top