பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு 25 அடி உயரம் 10 அடி அகலம் கொண்ட தங்கத்தேர் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது என திருப்பணிக்குழு நிர்வாகி தெரிவித்துள்ளார்
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் ஸ்தலம் என கூறப்படும் ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த மாதம் எட்டாம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் இரைப்பணி அறக்கட்டளை சார்பில் தங்கத்தேர் செய்ய தீர்மானிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் பணிகள் பல ஆண்டுகள் தடை பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி சங்கர மடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ விஜியேந்திர சங்கராச்சாரியார் அவர்களின் முன்னெடுப்பு காரணமாக மீண்டும் பணி துவக்கப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இந்த திருத்தேர் டிசம்பர் நான்காம் தேதி ஓரிக்கை மணிமண்டபத்தில் இருந்து ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு நான்கு நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளது .
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணி கூறுகையில், இத்தேர் 25 அடி உயரம் 10 அடி அகலம் கொண்டதாகவும் நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளும் நான்கு சாமர வீசும் பெண்கள் உருவமும் பிரம்மா தேர் செலுத்துவது போல் முன்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேரில் 16 நந்திகள் , 8 கந்தர்வர்கள் , 8 சங்கு பூதங்கள் என ஐந்து அடுக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு உருவாக்க 1600 அடி பர்மா தேக்கு மற்றும் இரண்டு டன் தாமிரம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு அதன் மேல் தங்கமூலம் பூசப்பட்டுள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு தங்கத்தேர் பவனி வர செய்தி காஞ்சி மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து பக்தர்களுக்கும் இனிப்பான செய்தியாக உள்ளது..




