Close
ஏப்ரல் 24, 2026 1:11 காலை

காஞ்சிபுரத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கான இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம்

காஞ்சிபுரம் தேஜஸ்வி பெட் கேர் சென்டர் சார்பில் , வளர்ப்பு பிராணிகளுக்கான இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமில் எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்து செல்ல பிராணிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார்

தமிழக முழுவதும் பெண்கள் இளைஞர்கள் என பல செல்ல பிராணிகளாக நாய், பூனை உள்ளிட்டவை வளர்த்து வருகின்றனர்.

இது மட்டுமல்ல அது தமிழகம் முழுவதும் உள்ள தெருக்களின் உள்ள நாய்களுக்கும் பொதுமக்கள் தங்களான உணவு உதவிகளை செய்து வளர்த்தும் வருகின்றனர்.

சமீப காலமாக செல்லப்பிராணிகளால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்களும் அதனால் உயிரிழப்புக்களும் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ரேபீஸ் தடுப்பூசி நோய் உரிய காலத்தில் செலுத்தாதது .

இந்நிலையில் காஞ்சிபுரம் தேஜஸ்வி பெட் கேர் சென்டர் மற்றும் கேனி பெட் டீலர் மற்றும் நல சங்கம் சார்பில் இலவச ரேபீஸ் தடுப்பூசி முகாம் காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் நடைபெற்றது.

இம்மகாமினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உணவுப் பொருட்களையும் வழங்கினார்.

மேலும் கால்நடை மருத்துவர்களுக்கு செல்ல பிராணி வளர்ப்போருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் இம்முகாமில் வழங்கினர். இதில் நாய் மற்றும் பூனைகளை சிறுவர் முதல் பெரியவர் வரை எடுத்து வந்து பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுகுறித்து முகாம் நிர்வாகி கூறுகையில், அடுத்த கட்டமாக காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைந்து தெரு நாய்களுக்கு இலவச ரேபீஸ் ஊசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top