புதுவைத் தமிழ்ச் சங்கம், நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து இராசராச சோழன் 1040ஆவது சதய விழா புதுச்சேரியில் தமிழ்ச் சங்கம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்ச் சான்றோர்கள் முன்னிலையில் வணிக கருத்தரங்கம் மற்றும் லண்டன் தமிழ் மொழி கலைக் கழகம் தலைவர் ஐயா சிவா பிள்ளை அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் இலண்டன் சிவா பிள்ளையின் 60 ஆண்டுகள் தமிழ்ச் சேவையை பாராட்டி அவருக்கு இராசராச சோழன் விருது வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில் புதுச்சேரி அரசின் துணை சபாநாயகர், நக்கீரர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முனைவர் சிவா பிள்ளை இலண்டனில் உள்ள ‘கோல்ட்ஸ்மித்’ பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையின் கணினி அதிகாரியாகவும், சவுத்வார்க் கல்லூரியில் தொழில் நுட்ப விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஓய்வில்லாமல் நம் மொழி சார்ந்தும் இனம் சார்ந்தும் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். பழகுவதற்கு இனிமையானவர்.
He may be retired
He never be tired.
இலண்டன் வாழ் தமிழர்களாகிய நமகெல்லாம் பெருமை மிகு தருணம் இது. ஐயா சிவகுருநாதப்பிள்ளை அவர்களை வாழ்த்துவோம்.
இங்கிலாந்திலிருந்து சங்கர்

