Close
மார்ச் 7, 2026 3:36 மணி

உசிலம்பட்டியில் சாரண, சாரணி இயக்க பொன்விழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன், அய்யப்பன் மற்றும் திமுக மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

முன்னதாக, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கும், பள்ளி வளாகத்தில் இருந்த காமராஜர் சிலைக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
இங்கு படிக்கும் பிள்ளைகள் நமது பிள்ளைகள் நன்றாக படித்து வந்தால் தான் நமக்கு பெருமை. கல்லூரி வருவதற்கு பி.கே.மூக்கையாத்தேவர் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லும் போது முக்குலமாக இருந்தாலும் எக்குலமும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களாக தான் நாம் என்றும் இருக்கிறோம் என்று கூறினார்

அமைச்சர் மூர்த்தி பேசும் போது உன்னிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் ஒரு காலத்தில் கரைந்து கூட போகலாம் ஆனால் நீ படித்தால் நீ படித்த படிப்பு உன்னோடு கடைசி வரை வரும்.

சாரண சாரணியர் இயக்கத்தில் நம்மை உறுப்பினராக இணைத்திருப்பது, தனி மனிதரின் ஒழுக்கம் சார்ந்தது, நாம் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும், ஒரு இயற்கை பேரிடர் என்றால் மற்றவர்களுக்கு எப்படி உதவிக்கரமாக இருக்க போகிறோம் என்று பயிற்சியில் சொல்லி வருகிறோம்.

அதனால் தான் இந்த இயக்கத்திற்காக ஒரு தலைமையிடம், அன்னல் காந்தியடிகள் வந்து போன இடத்தில் நமக்கான தலைமையிடத்தை அமைக்க 9 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார் முதல்வர்.

நம்மை உறுதிபடுத்தி காட்டினால் நமக்கு கை கொடுக்கும் முதல் ஆளாக நமது முதல்வர் இருக்கிறார். அதனால் தான் இரண்டரை லட்சமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கையை இன்று 10 லட்சத்தை தாண்டியுள்ளோம்.
ஒட்டுமொத்தமாக ஆறு நாடுகளில் இருக்கும் அனைத்து மாநில சாரண சாரணியர் இயக்கத்தினரும் பங்கேற்ற மிக பெரிய ஜாம்புரியை மணப்பாறையில் நடத்தி காட்டினோம். அந்நிகழ்வை ஏற்பாடு செய்த அரசுக்கும், துறை சார்ந்த அமைச்சருக்கும், இந்த துறையின் உயரிய விருதான வெள்ளி யானை என்ற விருதை வழங்குகிறோம் என அறிவித்துள்ளனர்.

என்னுடைய வாழ்நாளில் உசிலம்பட்டியை மறக்க முடியாது, ஏனென்றால் நேற்று முனைவர் பட்டம் பெற்றுவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளி யானை விருது அறிவிக்கப்பட்டு இன்று முதன்முதலாக ஒரு பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறேன் என்றால் அதுவும் எனக்கு மிகவும் பிடித்த சாரண சாரணியர் இயக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத பள்ளியாக நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாறியுள்ளது.

படிக்கின்ற பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துங்கள், இந்த வயது நம்மை அறியாமல் பல்வேறு விதமான கவனச்சிதறலுக்கு நம்மை ஆளாக்க தான் செய்யும். அன்று பொழுதுபோக்கு என்று சொன்னால் விளையாட்டாக தான் இருந்தது, அன்று ஒரே சேனல் தான் அதுவும் மாலை நேர ஒளிபரப்பு மட்டுமே, செல்போன் கிடையாது

ஆனால் அதையெல்லாம் கடந்து இன்று நிறைய சேனல்கள் வந்துவிட்டது, உலகமே நம் கைக்குள் வந்துவிட்டது. இது தான் உலகம் என்று தயவு செய்து மூழ்கி போய் விடாதீர்கள். இதை தாண்டி நமக்கான வெளி உலகம் இருக்கிறது, நம்முடைய சமுதாயம் இருக்கிறது, இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை படுவதை எல்லோராலும் செய்து விட முடியாது, நம்மை போன்ற சாரணர் இயக்கம், ஜேஆர்சி, என்சிசி இதை போன்ற அமைப்புகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் முடியும்.

வெறும் வகுப்பறைக்கு மட்டும் போய் வந்தால் வெறும் எழுத்துக்களை மட்டுமே கற்க முடியும்., விளையாட்டு வாழ்க்கைக்கான பாடத்தை சொல்லி தரும். விளையாட்டு மைதானத்திற்கு வாருங்கள் சமுதாயத்திற்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்ற பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

படிப்பு அவசியம் தான், இன்று 6, 7 ஆண்டுகளாக கொடுக்காமல் இருந்த ராஜ புரஸ்கார் விருதை தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் பிள்ளைகள் அந்த விருதை பெற்றுள்ளனர். இந்த விருதின் முக்கியத்துவம் என்ன என்றால் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் ஒரு இட ஒதுக்கீட்டிற்கான சான்றாக உள்ளது. படிப்போடு சேர்ந்த தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top