Close
மார்ச் 7, 2026 4:58 மணி

தீபத் திருவிழா: மின் ஒளியில் ஜொலித்த அண்ணாமலையார் திருக்கோயில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24ம் தேதி துவங்க உள்ளது. இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் மாதம் 3-ம் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்

இந்நிலையில் நாளை எல்லை தெய்வ வழிபாடு தொடங்குகிறது. நாளை முதல் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. முன்னிட்டு திருக்கோயில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன.

திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் மின்னலங்காரத்தை கண்டு ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top