அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 21ஆம் தேதி துவங்கியது.
தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், நேற்று இரவு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவங்கள் நடைபெற்றது.
இன்று அதிகாலை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் ,பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர்கள் கோயில் தங்க கொடிமரம் எதிரே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க , அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீபத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன், முக்கிய பிரமுகர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
இன்றைய திருவிழா விவரம்
24-11-2025 – திங்கட்கிழமை – முதல் நாள் திருவிழா – காலை கொடியேற்றம் – மாலையில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்கள் – இரவு உற்சவம் பஞ்சமூர்த்திகள் மற்றும் வெள்ளி அதிகார நந்தி, சிம்ம வாகனம், மயில் மூஷிகம் ஆகிய வாகனங்களில் சிறப்பு உற்சவம்.
25-11-2025 – இரண்டாம் நாள் உற்சவம்- காலை உற்சவம் – விநாயகர், சந்திரசேகர் – தங்க சூரிய பிரபை உற்சவம்.
இரவு உற்சவம் -பஞ்ச மூர்த்திகள் – வெள்ளி இந்திர விமானம்




