Close
மார்ச் 7, 2026 7:36 மணி

தீபத் திருவிழாவிற்கு போலி பாஸ்: கோயில் பணியாளர் உட்பட 3 பேர் கைது

போலி பாஸ்

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபம் நடைபெற உள்ளது,

தீபத் திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அனுமதி அட்டை அச்சிட்டு வழங்க திருவண்ணாமலை அடுத்த வெறையூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அனுமதி அட்டையை போலியாக ஈசானியம் அருகேயுள்ள யாத்திரி நிவாஸ் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் தயாரிக்கும் பணியில் கோயில் பணியாளர்கள்  ஈடுபடுவதாக தகவல் வெளியானது,

இந்த நிலையில் விடுதியில் போலி அடையாள அனுமதி அட்டை அச்சிடப்படுவதாக பாஜக மற்றும் பாமக கட்சியினருக்கு தெரியவந்து அங்கு சென்ற அவர்கள் விடுதியில் இருந்த ஒப்பந்தாரர் பாபுபை மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது,

மேலும் அந்த இடத்தில் அண்ணாமலையார் கோவில் பணியாளர்களும் உடன் இருந்தனர். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாபு மற்றும் அவரது உதவியாளர் முனுசாமி ஆகியோரை அங்கேயே வைத்து விசாரணை செய்தனர்.

அப்போது இன்று காலை திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்ளே வருவதற்காக காவல்துறை சார்பாக வழங்கப்படும் அடையாள அனுமதி அட்டையில் காவல் உதவி கண்காணிப்பாளரின் கையொப்பமிட்ட போலி அடையாள அனுமதி அட்டையை அச்சிட்டுள்ளனர்.

இதனால் ஒப்பந்ததாரர் பாபு, உதவியாளர் முனுசாமி, அண்ணாமலையார் கோவில் கார் டிரைவர் சிலம்பரசன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், போலியான பாஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, பிரிண்டா், போலியான அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதில் சிலம்பரசன் கோயில் இணை ஆணையரின் வாகன ஓட்டுநா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் ஊழியரே போலி பாஸ் தயாரிக்க உறுதுணையாக இருந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்து மேலும் பல கோயில் ஊழியர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என விசாரணை செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top