Close
மார்ச் 7, 2026 6:03 மணி

மதத்தைவைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை பலிக்காது: உதயநிதி ஸ்டாலின்

மாநாட்டு திடலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்

மதத்தைவைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை நிச்சயம் தமிழகத்தில் பலிக்காது, எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை மாநகராட்சி திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மண்டல இளைஞர் அணி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் , பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணைப்பொதுச் செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சக்கரபாணி, காந்தி, ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தினார்.

முன்னதாக திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் இளைஞர் அணி மாநாடு வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

திமுக தலைவர் உத்தரவுபடி இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மண்டலம் வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி பொறுத்தவரை மாவட்டம், மாநகரம் ஒன்றியத்தில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என நிர்வாகிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இளைஞர்கள் அதிக அளவில் திமுகவிற்கு வருகை தருகிறார்கள். ஒரு தொகுதிக்கு 1300க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்படுவார்கள். அனைத்து தொகுதிக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் நிர்வாகிகள் இளைஞர் அணியில் இருப்பார்கள் என தெரிவித்தார் .

தொடர்ந்து பேசுகையில், தமிழகத்தில் எந்த அணியிலும் இல்லாத அளவில் நிர்வாகிகள் திமுக இளைஞர் அணியில் இருப்பார்கள் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மண்டலம் வாரியாக இளைஞர் அணி நிர்வாகிகளை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அதன்படி முதலில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 91 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளின் சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு நிகழ்விற்கு 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். இந்த சந்திப்பு கூட்டத்தில் இளைஞர் நிர்வாகிகளை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயார்படுவதற்காகவும், அரசியல் படுத்துவதற்காகவும் இந்த மண்டல சந்திப்பு நிகழ்ச்சி முதன் முதலில் திருவண்ணாமலையில் டிசம்பர் 14 தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு உண்டான பணிகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் எ.வ.வேலு செய்து வருகிறார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவதற்காக ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. 2024-ல் சேலத்தில் இளைஞர் அணி இரண்டாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். அந்த மாநாடு திமுகவினுடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை முடிவு செய்தது. அதேபோல் தற்போது நடைபெற உள்ள முதல் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின்வெற்றியை முடிவு செய்யும் என்று நம்பிக்கை உள்ளது,

மேலும் மதத்தைவைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை நிச்சயம் தமிழகத்தில் பலிக்காது, இது திராவிடமண், தமிழ்மண் நிச்சயமாக அதற்கு அரசும் இடம் கொடுக்காது என்றும், திருப்பரங்குன்றம் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஶ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன்,  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top