Close
மார்ச் 7, 2026 4:26 மணி

தனியார் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ஆறு மின்சார கார்கள்: மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ துறை சார்பில் மருத்துவப் பயனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின் கீழ் மருத்துவ பயனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று மருந்துகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், இத்திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மோபீஸ் ஹுண்டாய் நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதியின் கீழ் இலவசமாக ஆறு மின்சார பேட்டரி கார் வாகனங்களை வழங்க திட்டமிட்டு அதற்கான ஒப்புதல் மாவட்ட நிர்வாகத்தை விடமிருந்து பெறப்பட்டது.

இந்த மருத்துவ வாகனங்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிற்சாலையின் துணை பொது மேலாளர் திரு. ஹு மின் ஹோ (Hu Min Ho) , மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் கார்களை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த மருத்துவ வாகனம் 5 வட்டார அளவில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு கூடுதலான மருத்துவ சேவைகள் புரிய ஏதுவாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் .செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஆர்த்தி மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top