Close
மார்ச் 7, 2026 1:08 மணி

கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.

அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 91 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகியோர் எழுச்சி உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கீழ்பென்னாத்தூரில் புதிதாக நிறுவப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து திமுக கொடி ஏற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில் இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ. வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ  , தயாநிதி மாறன் எம்பி ,மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில பொறியாளா் அணிச் செயலா் எஸ்.கே.பி.கருணா, தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், அரசு ஒப்பந்ததாரா் அருணை துரை வெங்கட், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top