நாம் திரையரங்கில் இருக்கும் அந்த 3 மணி 17 நிமிடங்களில் வேறு ஒரு உலகத்திற்கு சென்று திரும்பும் அந்த அனுபவத்திற்கு இந்த வாய்ப்பை தவற விட்டால், அடுத்த இரண்டு பாகத்திற்காக இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரும். திரையரங்கம் சென்று பார்த்துவிட்டு பாருங்கள்.
தொழில் நுட்பத்தின் உச்சபட்ச நகர்வு, வெள்ளித்திரையில் காட்சியாக விரியும் போது, அங்கே ஜேம்ஸ் கேமரூன் என்ற மாயாஜல வித்தைகாரரின் பிரமாண்ட கற்பனைக்கு முன், ஹாலிவுட் உட்பட ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களும், அந்த மகா கலைஞனின் திரை மொழியை கொண்டாடமல்
இருக்க முடியாது…!
படம் நீளமானது என்றாலும், கேமரூன் ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், கதைக்களங்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார் என சொல்வதற்கில்லை. வளத்தை காப்பாற்ற வேண்டும், தீயசக்திகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அதே ஒற்றை வரிக்கதை தான்.
திரைப்படம் குறித்து கட்டுரை போல எழுதப்படுவதற்கல்ல, மாறாக தொழிற் நுட்பத்தில் அதன் மாஸ்டர் கிளாஸிற்காக ரசிக்கப்படுவதற்காகவே. விஎஃப்எக்ஸ் துறையில் ஒரு புதிய மைல்கல். திரையில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சிகளை அனுபவிக்கக்கூடிய சகாப்தத்தில் இருப்பது நமக்கு அதிர்ஷ்டம்.
நம் கனவில் கூட இதுபோன்ற உலகங்களை கற்பனை செய்யும் திறமை நமக்கு இல்லை என்று நினைக்கிறேன். நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று, செல்லுலாயிடில் கிடைக்கிற போது அனுபவித்து விட வேண்டும், அதிமேதாவித்தனத்துடன் அலசி ஆராய்ச்சி செய்யாமல்.
எனவே ஒரு சினிமா ரசிகனாக, திரைத்துறை வெளியிடும் அத்தனை ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், மிஷன் இம்பாசிபிள்ஸ் வரிசைகளுடன் அவதார் படங்களையும் பார்த்துவிட வேண்டியது தான்.
இங்கிலாந்திலிருந்து சங்கர்

