காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் 30 நிமிடம் நடைபெற்று நிறைவு பெற்றது.
இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், எஸ் ஐ ஆர் பணியில் விடுபட்டவர்களை படிவம் ஆறு மூலம் சேர்க்கும் பணி மற்றும் நீக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு தலைமை தெரிவிக்கும் அறிவுரைப்படி நடத்தப்படும் என தெரிவித்தார்.
திமுக தீய சக்தி என விஜய் கூறியது குறித்து கேட்டபோது, ஏற்கனவே பலர் திமுகவின் தீய சக்தி எனக் கூறிய நிலையில் அவர்கள் தற்போது காணாமல் போய் உள்ளது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.




