Close
மார்ச் 7, 2026 11:57 காலை

ஜெஇஇ உண்டு உறைவிட பயிற்சி முகாமுக்கு காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் ஏழு அரசு பள்ளி மாணவிகள்

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் JEE தேர்வில் வெற்றி பெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்படுகிறது.

மேலும் இவர்களுக்கு வலுவூட்டும் வகையில் சிறப்பு உண்டு JEE உண்டு உறைவிட பயிற்சி முகாம் கடலூரில் நாளை முதல் துவங்கி அடுத்த மாதம் ஜனவரி 18 வரை நடைபெற உள்ளது.

இதில் JEE தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடவாரியாக பயிற்சி மாதிரி தேர்வுகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 7 அரசு பள்ளி மாணவிகள் இன்று கடலூருக்கு புறப்படும் முதன்மை கல்வி அலுவலர் நளினியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில் முழு கவனத்துடன் படித்து உங்கள் இலக்கை அடைய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

கடலூரில் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் தமிழக முழுவதும் இருந்து 34 மாணவர்கள் 116 மாணவிகள் என மொத்தம் 150 பேர் பங்கேற்க உள்ளதும் முதல் முறையாக அரசு பள்ளி மாணவிகளை சிறப்பு பயிற்சி அளிக்கும் நிகழ்வு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top