Close
ஏப்ரல் 23, 2026 9:56 மணி

பொங்கல் பண்டிகை ஒட்டி இலவச வேட்டி சேலை: ஜனவரி ஐந்து முதல் துவங்க உள்ளதாக கைத்தறி நூல் அமைச்சர் காந்தி தகவல்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக முழுவதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் காந்தி வருகை புரிந்தார் .

அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை அரசு வழங்குவது வழக்கம்.

அவ்வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி சேலை அனைத்தும் டிசம்பர் 15ஆம் தேதியே வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் வழங்க உள்ளது என தமிழக கைத்தறி துறை நூல் அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top