Close
மார்ச் 7, 2026 4:40 மணி

மத்திய அரசின் தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். இதையடுத்து நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர்: கல்வராயன் மலையின் கம்பீரமும், ஆன்மிகமும் நிறைந்த கள்ளக்குறிச்சியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. திராவிட மாடல் என்பது சாதனை திட்டங்கள் நிறைந்த அரசு. மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய திட்டங்களை கொடுத்து, மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு இது. தீயணைப்பு, மீட்பு நிலையம், உயர்மட்டப் பாலம், சாலைகள் போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம்.

ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் நம்மை பார்த்து, பின்பற்றக்கூடிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 3.18 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தாயுமானவன் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான் முதல்வன் திட்ட பயனாளிகளின் மகிழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்தேன். திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் கள்ளக்குறிச்சி பயன்பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா. எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. பொதுப்போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பட்டியலிட்டால் மூச்சுவாங்கும் அளவுக்கு சாதனைகள் செய்துள்ளோம்.

எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பாஜவின் கண்களை உறுத்துகிறது. எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு வந்தாலும் சரி, தமிழ்நாட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள். இந்த ஸ்டாலினைத் தாண்டி நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திராவிட மாடல் அரசின் 2.0 தொடரும் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து புதியதாக கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், அவர்களை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் முதல்வர் அமர வைத்தார்

விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி. கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் க.கார்த்திகேயன், தா. உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், கள்ளக்குறிச்சி எம்.பி. தே. மலையரசன், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை

கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச் சாலை மற்றும் ரிஷிவந்தியம் அருகேயுள்ள மணலூா்பேட்டை ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்  திறந்துவைத்தாா்.

மாவட்ட ஆட்சியரை இருக்கையில் அமர வைத்த முதலமைச்சர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top