Close
மார்ச் 7, 2026 1:16 மணி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஏஓ சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் விஏஓ சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஏஓ சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜா வரவேற்றார்.

போராட்டத்தில் நவீனமயமாக்கம் செய்யப்பட்ட விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும். விஏஓக்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும். தேர்வுநிலை விஏஓ மற்றும் சிறப்பு நிலை விஏஓ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். நிலைக்கேற்ப சம்பள உயர்வு வழங்க வேண்டும்.

டிஎஸ்எல்ஆர் பட்டா மாறுதலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் அன்புராஜ், பொன்னுதுரை, குமார், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top