Close
மார்ச் 7, 2026 2:51 மணி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆய்வுக் கூட்டம்: சிறப்பு பார்வையாளர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் தொடர்பாக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கமிஷன் சிறப்பு பார்வையாளர் கலந்துகொண்டார்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் குல்திப் நாராயண் தலைமை வகித்தார். மாவட்டத்தில், 1,200 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல், புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்குதல், வாக்குச்சாவடி அமைவிட மாற்றம், முகவரியில் இல்லாத வாக்காளர்கள் உள்ளிட்ட இனங்களை அவர் ஆய்வு செய்தர்.

அப்போது அவர் கூறியதாவது: வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் (பிஎல்ஏ2) வாக்குச்சாவடிகளிலும், அனைத்து கட்சியினரும் நியமனம் செய்ய வேண்டும். முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள் தொடர்பான ஆட்சேபனைகள் குறித்து, ஓட்டுச்சாவடி ஏஜெண்டுகள் சிறப்பு கவனம் செலுத்தி, மாற்றங்கள் ஏதாவது இருந்தால் அவற்றை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

மேலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் தொடர்பாக, படிவம் 6ஐ, புதிய வாக்காளரிடம் பெற்று வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

அதையடுத்து, நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நாமக்கல் மாநகராட்சி கொண்டிசெட்டிபட்டி, பெரியூர் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில், எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக அவர் கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top