நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம ஊராட்சிகளில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளில், காலை 11மணியளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள பொருள்கள்:
- கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
- ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.
- கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
- மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026&-27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல்.
- தொழிலாளர் வரவு- செலவுதிட்டம் மற்றும் மேற்கொள்ளப்படும் பணிகள்.
- நலிவு நிலை குறைப்பு நிதி,
- ஊரக தூய்மை பாரத இயக்கம் திட்டம்,
- ஜல்ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரம்,
- தொகுதி மேம்பாட்டுத் திட்டம்,
- போதைப் பொருள் ஒழிப்பு மற்றும்
- பனை மரபாதுகாப்பு திட்டங்கள் மற்றும் இதர பொருட்கள் குறித்து, கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
சம்மந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


