Close
மார்ச் 7, 2026 4:24 மணி

பெரிய பாளையத்தில் சாலையை ஆக்கிரமித்து திமுக பரப்புரை மேடை: வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதி.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இன்று நடைபெர்ற உள்ள தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் பிரம்மாண்டமான விழா மேடை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் நாசர், சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இந்நிலையில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டுள்ள விழா மேடையால் சென்னையிலிருந்து திருப்பதிக்கு, திருப்பதி- சென்னை நோக்கி வரும் வாகனங்கள் காலை முதல போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.

மேலும் சென்னையில் இருந்து பெரியபாளையம் வரும் பேருந்துகள் நெல்சரில் சிக்கியதால் கல்லூரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை என புலம்பித் தீர்த்தனர்.

நோயாளி ஒருவர் 108 ஆம்புலன்சில் அவசர சிகிச்சைக்காக செல்ல முடியாமல் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் சிலர் நெருசிலை சரி செய்து அந்த ஆம்புலன்ஸை வழி அனுப்பி வைத்தனர்.

வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கு, பாதிப்பு இல்லாமல் அரசியல் கட்சி மேடைகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top