தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் திங்கள்கிழமை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை கலைஞா் நூற்றாண்டு பன்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து உணவு பரிமாறினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சட்டப்பேரவை துணைத் தலைவா் பேசுகையில், தமிழக முதல்வா் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
சுற்றுப்புறத்தை தூய்மை செய்து சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் தூய்மைப் பணியாா்களின் சேவையை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கிவைத்துள்ளாா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி , மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், பகுதி பொறுப்பாளர்கள் மாணவரணி மாவட்ட பொறுப்பாளர காலேஜ் கு.ரவி, பகுதி பொறுப்பாளர்கள் , ஷெரீப், மாமன்ற உறுப்பினர் அருணா ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம்
செங்கம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாரத் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி குத்துவிளக்கேற்றி உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு வழங்கிய பெட்டகத்தை வழங்கி, அவா்களுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.
நிகழ்ச்சியில் செங்கம் நகர திமுக செயலா் அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.




