Close
மார்ச் 7, 2026 2:33 மணி

காரியாபட்டி பொதுமக்கள் வசதிக்காக 75 கோடி வைகை கூட்டு குடிநீர் திட்டம் : அமைச்சர் தங்கம் தென்னரசு

காரியாபட்டி மக்கள் வசதிக்காக 75 கோடி மதிப்பீட்டில் வைகை ஆற்று கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் படுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி யில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. விழாவினை முன்னிட்டு, கரிசல்குளம், செவல்பட்டி, என்.ஜி.ஓ நகர், பாண்டியன் நகர், அச்சம்பட்டி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார் .

அப்போது ,அவர் கூறியதாவது. தி.மு.க. அரசு கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முழுமையாக செய்து முடித்துள்ளோம். 5 ஆண்டு நிறைவு செய்து மீண்டும் உங்களுடைய மகத்தான ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடை முறை படுத்திய விடியல் பயணம், புதுமை பெண், மகளிர் உரிமை போன்ற திட்டங்கள் இன்று பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

காரியாபட்டி பேரூராட்சி மக்களின் அடிப்படை தேவைகள் குறிப்பாக குடிநீர் , தெரு மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரியாபட்டி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை கூட்டு குடிநீர் திட்டம் 75 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மக்களுக்கு உழைத்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்

விழாவில்  பேரூராட்சித் தலைவர் செந்தில், ஒன்றியச் செயலாளர் செல்லம், கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, பிரதிநிதி சங்கர பாண்டியன், மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் மருது பாண்டியன், மாவட்ட விவசாய, தொழிலாளர் அணி அமைப்பாளர் தங்கப் பாண்டி யன், துணை அமைப்பாளர் கல்யாணி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கருப்பு ராஜா, தகவல்தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மனோஜ் பிரபாகர், கவுன்சிலர்கள் செல்வராஜ், சரஸ்வதி பாண்டியன், வசந்தா செந்தில், தீபா, முத்துக் குமார் சரவணன் ரெங்கராஜன், சே து உட்பட பலர் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top