Close
மார்ச் 7, 2026 2:51 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் விடியா திமுக ஸ்டாலின் அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும்  திமுக ஸ்டாலின் அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் திருவண்ணாமலை மாநகரம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெறது

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் சங்கர் பாலசுப்பிரமணியன், பாமக மாவட்டச் செயலா் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர் .

மேலும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், மு.சட்டமன்ற உறுப்பினர்கள், மு.அமைச்சர்கள், முன்னாள் சார்பு அணி நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் நகர வார்டு நிர்வாகிகள், வார்டு சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள், அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் க.சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா் சேவூா் இராமச்சந்திரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். இதில், நகரச் செயலா் அசோக் குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜெயபிரகாஷ், திருமால், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், மாவட்ட இணைச் செயலா் வனிதாசதீஷ், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் உசேன் ஷெரீப் மற்றும் பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம், பாஜக மத்திய நலத் திட்ட பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

செங்கத்தில் செங்கம் ஒன்றிய, நகர அதிமுக கூட்டணி சாா்பில், செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செங்கம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ மணிவா்மா கண்டன உரையாற்றினாா்.

பாமக மாவட்டச் செயலா் பாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலா் சுரேஷ், பாஜக மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ், முன்னாள் எம்.பி. வனரோஜா ஆகியோா் பேசினா்.

முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போளூரில்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் விமல்ராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வம், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் காா்த்திகேயன், நகா்மன்ற உறுப்பினா் லாவண்யா முருகன், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் சூா்யாமணி, மனோஜ்குமாா் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top