Close
மார்ச் 7, 2026 4:40 மணி

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய சரவணன் எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி, ஆதமங்கலம் புதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள 3 பள்ளிகளில் 227 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆஷா, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கி பேசியதாவது:  கடலாடி, ஆதமங்கலம் புதூர் ஊராட்சிகளில் 3 அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 227 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் தொடர்ந்து வழங்கி வருகிறார். அதில் மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கி மாணவர்களின் தொலைதூர பயணத்தை குறைக்கும் விதமாக மிதிவண்டியை வழங்கினார்.

அதேபோல் மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்திலும், தமிழ்ப் புதல்வன் திட்டத்திலும் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சிறந்த முறையில் படிப்பதற்காக நான் முதல்வன் திட்டம், மாணவர்கள் மதிய நேரங்களில் சத்தான உணவை அருந்த வேண்டும் என்பதற்காக தினந்தோறும் முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவர்கள் உயர் கல்வி படிக்கும்போது உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தில் மடிக்கணினி வழங்கி மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்தி உள்ளார்.  மாணவர்கள் நன்கு படித்து இந்த ஊருக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி முருகையன், மாவட்ட அணி அமைப்பாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ,ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top