Close
ஏப்ரல் 24, 2026 12:51 காலை

கீழ்பெண்ணாத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்ட விழா

கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரைமேட்டில் புற்று உருவில் அமைந்து அருள் பாலித்து வரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான 73-ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 15-ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. சக்தி அழைப்பு, கரகஜோடிப்பு, கொடியேற்றம், காப்புகட்டுதல் , மாலை அணிதல் ஆகியவையும்நடந்தது. அன்றிரவு அம்மன் வீதி உலாவும் நடந்தது.

அதைத் தொடர்ந்து மறுநாள்அம்மன்வேடமனிந்து பக்தர்கள் பலரும் பம்பை மேளதாளத்துடன் வீதி உலாவாக வந்தனர். பின்னர் மயான கொள்ளை நிகழ்ச்சியும், அன்றிரவு 1008 நாமாவளியுடன் குங்கும அர்ச்சனையும், அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், அமாவாசை வழிபாடும் கோயிலில் நடந்தது.

கடந்த 17-ம் தேதி கோவில் முன்பாக நடந்த மகா சண்டிஹோமம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அதைத்தொடர்ந்து18-ம் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்ற ஶ்ரீலலிதாசகஸ்ரநாமம், குங்கும அர்ச்சனையும்,19-ம்தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் பம்பை, மேளதாளத்துடன் அம்மன் அலங்காரத்துடன் மாடவீதி உலாவும், அதைத்தொடர்ந்து கோயில் எதிரில் தீமிதி விழாவும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,வழிபாடும் நடந்தது. அதைத் தொடர்ந்து இரவு பம்பை உடுக்கையுடன் வல்லாள கண்டி நிசாசினி சம்ஹாரத்துடன் மங்கள மேளதாளத்துடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும் நடந்தது. வாண வேடிக்கையும் இடம் பெற்றன.

நேற்று காலையில் கோயில் முன்பாக வைக்கப்பட்டிருந்த உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. பிற்பகல் 3 மணியளவில் 32 அடி உயர தேரில் வாழைமரம், இளநீர் குலைகள், மாவிலை மற்றும் வண்ண வண்ணதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் அம்மனை தேரில் அமரச் செய்து மேளதாளத்துடன் அதிர் வேட்டுகள் முழங்க திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

முக்கிய சாலைகள் வழியாக சென்ற தேர் கோயில் அருகே மாலையில் நிலையை அடைந்தது. தேரோட்ட விழாவில் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர்.

விழாவில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாரும், முன்னாள் அமைச்சருமான எஸ். ராமச்சந்திரன், கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார் . மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top