Close
மார்ச் 7, 2026 1:40 மணி

மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், பக்தர்களுக்கு மாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாதப் பெளா்ணமி 2.03.2026 மாலை 6.28 மணிக்கு தொடங்கி 3ம் தேதி செவ்வாய் மாலை 5.52 மணிக்கு பௌர்ணமி நிறைவு பெறுகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

மாசி மாதப் பௌர்ணமியின் முக்கியத்துவம்

ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துடன் தொடர்புடையது. மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரப் பௌர்ணமி மிகுந்த ஆன்மிக முக்கியத்துவம் பெற்றது.

மகம் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரமாகும். சிம்ம ராசியில் சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கும் போது, கும்ப ராசியில் சூரியன் ராகுவின் நட்சத்திரத்தில் இருக்கும் போது, மாசி பௌர்ணமி வரும். பௌர்ணமி திதி திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் தொடுவதால், சிவன்–சக்தி அருளைப் பெற உகந்த காலமாக கருதப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top