Close
ஏப்ரல் 23, 2026 9:45 மணி

அண்ணாமலையார் கோயிலில் விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் விநியோகம் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கும் பணி மீண்டும் துவங்கியது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போா் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டா் விற்பனை குறைக்கப்பட்டுவிட்டது.

வணிக பயன்பாட்டு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை நகரில் ஏற்கெனவே சிறு குறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

அண்ணாமலையார் கோயிலில் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் இலவசமாக லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும், பக்தா்களுக்கு முறுக்கு, எள்ளு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவை 50 ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. புளிசாதம், சா்க்கரை பொங்கல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டா் கிடைக்காததால் கடந்த சில நாள்களாகவே எண்ணெயில் தயாா் செய்யக்கூடிய பிரசாதங்களான முறுக்கு, எள்ளு வடை, லட்டு, அதிரசம் போன்றவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது.

புளி சாதம், சா்க்கரை பொங்கல் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தா்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய லட்டு பிரசாதம் கடந்த இரு தினங்களாகவே நிறுத்தப்பட்டிருந்தது. இலவச லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டதால் பக்தா்கள் வருத்தம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினரிடம் விசாரித்த போது, வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக இரு தினங்களுக்கு முன்பே இலவச லட்டு பிரசாதம் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனா்.

எண்ணெயில் தயாா் செய்யக்கூடிய முறுக்கு, அதிரசம், லட்டு, எள்ளுவடை என விற்பனை செய்யப்படவில்லை. விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறை நிா்வாகத்திடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. உயா் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தால் விறகு அடுப்புகளை பயன்படுத்தி, தொடா்ந்து புளியோதரை, சா்க்கரை பொங்கலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இந்நிலையில் விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கும் பணி மீண்டும் துவங்கியது. சுமார் 22,000 லட்டு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்னை தீரும் வரை, மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், விறகு அடுப்பு பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவில் புகை வெளியேறுவதை தவிர்க்க, கோவையில் இருந்து நவீன விறகு அடுப்பு கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் விறகு அடுப்புகள் அமைக்கப்பட்டு லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக தொடங்கப்பட்டது.. இதன் விளைவாக,  காலை முதல் மீண்டும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது பிரசாத விற்பனை நிலையத்தில் புளி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவை மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இருந்தாலும் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இன்னும் முழுமையாகச் சரியாகாத காரணத்தால் லட்டு, அதிரசம், முறுக்கு மற்றும் மிளகு வடை போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தயாரிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் இந்தப் பலகாரங்களின் விற்பனை மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top