Close
ஏப்ரல் 23, 2026 11:16 மணி

சட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டசபை தேர்தல் வாக்குடுப்பதிவு ஏப். 23ம் தேதி நடைபெறுவதையொட்டி, ஏப். 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்களும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி ஒரு நாள் என மொத்தம் 4 நாட்கள் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களையும் மூடி வைக்க வேண்டும்.

மேலும் லைசென்ஸ் பெற்ற அனைத்து பார்களையும் மூடி வைக்க வேண்டும். உத்தரவை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக மது விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top