உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய் மகாலிங்கம் இன்று தனது வேட்புமனுவை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமாரிடம் வழங்கினார்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம்., தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பாப்பாபட்டி பத்து தேவர்கள் ஆசி வழங்கி, பாரம்பரிய மேள தாளத்துடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்த விஜய் மகாலிங்கம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தவெக வேட்பாளர் விஜய் மகாலிங்கம், மக்களின் பாதுகாவலராகவே எங்களை வேட்பாளர்களாக தலைவர் விஜய் நிறுத்தியுள்ளார்., உசிலம்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் தவெக மட்டுமே உள்ளது. ஏனெனில், இதற்கு முன் வெற்றி பெற்ற யாரும் உசிலம்பட்டியின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஏதும் செய்யவில்லை/ ஆதலால் , உசிலம்பட்டி தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெறுவோம் என பேட்டியளித்தார்.




