Close
மே 4, 2026 11:01 மணி

இலவசங்களுக்கு அடிபணியாத தமிழக வாக்காளர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வந்து விட்டது. தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிபணிந்தார்களா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். திமுக அரசு மகளிர் கட்டணமில்லா பேருந்து மற்றும் மகளிர் உரிமைத் தொகை என இலவசங்களை வாரி வழங்கியுள்ளது. மேலும் இந்த தேர்தலில் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

அதிமுகவும் சளைத்ததில்லை. அவர்களும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்கள் 1.31 கோடி இந்த வாக்குகள் திமுக கூட்டணிக்கு அப்படியே விழுந்துள்ளது என கணக்கில் கொண்டால், திமுக கூட்டணி இந்த தேர்தலில் 2,31,36,611 வாக்குகளை பெற வேண்டும்,

ஆனால் மக்களின் மனநிலை வேறாக இருந்துள்ளது. இலவசங்களை அவர்கள் புறக்கணித்துள்ளனர். அவர்கள் தரும் இலவசங்கள் அவர்கள் சொந்த பணத்தை கொண்டு அளிக்கப்படுவதில்லை, ஆனால் தங்களது வரிப்பணத்தை வாரி இறைக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர் என்பதைத் தான் இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இரண்டு திராவிட கட்சிகளும் ஓட்டுக்காக பணத்தை வாரி இறைத்தன. திமுக மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் 1.31 மகளிர்க்கு மூன்று மாத தொகை மற்றும் ஊக்கத்தொகை என ரூ. 5000 அளித்தது. இவையெல்லாம் மம்தா பானர்ஜி கூறியதுபோல தேர்தல் லஞ்சம் என்பதை தமிழக மக்கள் நன்றாக உனர்துள்ளனர்.

அதன் காரணமாகத்தான் இரண்டு கட்சிகளிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு தவெகவிற்கு வாக்களித்துள்ளனர்.

இலவசங்கள் இனி எடுபடாது என்பதை இதன் பிறகாவது அரசியல் கட்சிகள் உணர வேண்டும். தேவையற்ற இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடாமல் இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top