Close
மே 3, 2026 6:18 மணி

திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி விழா: 300 டன் குப்பைகள் அகற்றம்

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, கிரிவலப் பாதை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் குவிந்த சுமார் 320 மெட்ரிக் டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நிறைவடைந்ததை முன்னிட்டு கிரிவலப்பாதையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி கிரிவலமானது 30.04.2026 மற்றும் 01.05.2026 ஆகிய தினங்கள் நடைபெற்றது. இதில் 20 இலட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்டை வசதிகளான குடிநீர், கழிவறை, மருத்துவ முகாம்கள், 108 அவசர ஊர்தி வாகனங்கள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயலாற்றியது.

மேலும் மாநகராட்சி சார்பாக பல்வேறு நகராட்சிகளிலிருந்து 2105 தூய்மைபணியாளர்கள் திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப்பாதைகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர். தூய்மை பணிகளை மேற்கொள்ள 126 துப்புரவு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தற்பொழுது வரை 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் அருகில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிறப்பான சேவையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top