Close
மே 6, 2026 9:21 மணி

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா: ஜோதிமணி எம்.பி

தவெகவுடன் காங். கட்சி கூட்டணி அமைத்துள்ளதற்கு  விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கூட்டணிகள் அமைவதும், பிரிவதும் சகஜமான ஒன்றுதான்” என்று காங் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்

இது குறித்து எக்ஸ் தளத்தில் விரிவான பதிவை வெளியிட்டுள்ள ஜோதிமணி, 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக எடுத்த முடிவைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014-ல் தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, நீண்ட கால கூட்டணியில் இருந்த காங்கிரஸை திமுக வெளியேற்றியது. இதனால் காங் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அப்போது காங். கட்சி திமுகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதனை ஒரு அரசியல் நகர்வாகவே கருதியது.

தமிழகத்தின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே தவெகவுடன் கூட்டணி அமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏகமனதாக முடிவு செய்தது. திமுகவுடன் நீண்ட காலம் பயணித்தோம். கூட்டணியில் இருக்கும்போது ஏற்றத்தாழ்வுகள் வருவது இயல்பு. இப்போது தமிழகத்தின் நலனுக்காகத் தவெக-வுடன் இணைய முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவு குறித்துப் பேசிய அவர், பரஸ்பர மரியாதையுடன் பிரிவதே சிறந்தது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் அவர்களே தேர்தலில் தோல்வியடைந்திருக்கும் நிலையில், நேற்று வரை கூட்டணியில் இருந்துவிட்டு இன்று திமுகவை கடுமையாக விமர்சிப்பது காங்கிரஸின் பண்பாடு அல்ல . இரு தரப்பிலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, காங்கிரஸின் இந்த முடிவை திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடுமையாக விமர்சித்ததோடு, இது “முதுகில் குத்தும் செயல்” என்றும் காங்கிரஸை நம்ப முடியாது என்றும் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top