Close
ஜூன் 30, 2026 12:52 காலை

திருவண்ணாமலையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவண்ணாமலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை சார்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் கீழ் வேங்கிக்கால் சமுதாய கூடத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் முன்னிலை வகித்தார்.

இம்முகாமிற்காக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட 1945 சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. போலியோ சொட்டு மருந்து முகாமானது காலை 7 மணி முதல் மாலை 5 வரையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாநகராட்சி துணைமேயர் இராஜாங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. வெங்கடரமணன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரஹ்மான் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top