Close
ஜூன் 29, 2026 11:33 மணி

உசிலம்பட்டி அருகே போதை மாத்திரைகள் விற்ற இளைஞர்கள் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்கானூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகமாகி வருதாகவும் , இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிமாக பாதிக்கப்பட்டு வருவதாக எழுந்துள்ளது.

புகாரின் அடிப்படையில்  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் செக்கானூரணி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வடக்கம்பட்டியைச் சேர்ந்த தென்னவன் மற்றும் விஷால், கேசவன்பட்டியைச் சேர்ந்த லோகபாண்டி, கீழப்பச்சேரியைச் சேர்ந்த நந்தகுமார், திருமங்கலம் சிக்கம்பட்டியைச் சேர்ந்த சுபாஷ், இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ்.மங்கலம் இக்பால் தெருவைச் சேர்ந்த சோபியோன்ராஜ் ஆகிய 6 இளைஞர்களிடமிருந்து 580 போதை மாத்திரைகள், ஒரு கார், ஒரு கேடிஎம் பைக், ஒரு ஏர் பிஸ்டல், 11 வாள்கள், 6 செல்போன்கள், ஒரு லேப்டாப், 5100 யணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து செக்கானூரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த மாத்திரைகள் எங்கிருந்து யார் மூலம் கிடைக்கப்பெற்றது, யார் யாருடன் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களின் குறிவைத்து போதை மாத்திரைகள் விற்று வந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top