Close
ஆகஸ்ட் 31, 2026 12:21 காலை

நாமக்கல் டவுன் போலீஸ் டிஎஸ்பி பொறுப்பேற்பு

நாமக்கல், நல்லிபாளையம், மோகனூர், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, வாழவந்திநாடு போலீஸ் நிலையங்கள் அடங்கிய நாமக்கல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக  பணியாற்றி வந்த ஆகாஷ் ஜோஷி திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக மதுரையில் உதவி காவல் ஆணையராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரன் நாமக்கல் காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம் ஆகும். 2020-ல் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் நெல்லை மாநகரம் ஜங்ஷன் உதவி காவல் ஆணையராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகரம் தல்லாகுளம் உதவி காவல் ஆணையராக பணியாற்றினார்.

இந்த நிலையில் அவர் நாமக்கல்லுக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top