மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் புதியதாக கோவில் எழுப்பப்பட்டு, சுமார் 20 அடியில் உயரத்தில் கோபுரங்கள் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, மகா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, முதல் கால பூஜைகள், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மூன்றாம் காலயாகசாலை பூஜைகளை தொடர்ந்து பூர்ணாஹுதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றிய பின்பு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் கருவறையில் அருள்மிகு சந்தன மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.




