Close
ஜூலை 17, 2026 2:15 காலை

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் ஆதரவு தாரீர் என்ற தலைப்பில் கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு நிகழ்ச்சி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ உ சி சிலை அருகில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நூர் முகமது தலைமை தாங்கி கையெழுத்து மற்றும் கைரேகைகளை பதிவு செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கைரேகை மற்றும் தங்கள் கையெழுத்தை பதிவு செய்து சென்றனர்

இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் நகர் காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி, வட்டார தலைவர் பழனிவேல், மகிளா காங்கிரஸ் தலைவர் செல்லப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிர்வாகிகள் மணி சோணைமுத்து, அலங்காநல்லூர் ராயல் வாடிப்பட்டி முருகானந்தம், செந்தில், சேகரன், டெய்லர் ரவி, பரமசிவம், நாராயணன், சுரேஷ், மேலக்கால் அழகுமலை, பரமசிவம், சீனிவாசன் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு சங்கரபாண்டி ராஜா, குருவித்துறை சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

காங்கிரஸ் தலைவர் செல்லப்பா சரவணன் நன்றி கூறினார் தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top