Close
ஜூலை 18, 2026 2:39 காலை

மனவளக்கலை பயிற்சி நிறைவு நாமக்கல்லில் சான்றிதழ் வழங்கல்

நாமக்கல்லில் மனவளக்கலை மன்றம் சார்பில் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மனவளக்கலை மன்றம் மற்றும் அறிவுத்திருக்கோவில் சார்பில், மனவளக்களை பயிற்சி நடைபெற்றது. பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. சேலம் மண்டல தலைவர் உழவன் தங்கவேல், தாளாளர்கள் நந்தகுமார், தவஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட சிஇஓ மாதவன், மனவளக்கலை பயிற்சிகளை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

நாமக்கல் அறிவுத்திருக்கோவில் செயலாளர் சுப்ரமணியன், ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன், உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top