Close
ஜூலை 18, 2026 2:44 காலை

நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவி நீட் தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பெற்று சாதனை

நீட் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி ஸ்ரீநிகாவிற்கு, கிரீன் பார்க் பள்ளி அகாடமிக் இயக்குனர் சச்சின்சூர்யா பூக்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் தாளாளர் சரவணன்.

நாமக்கல்லை சேர்ந்த கிரீன் பார்க் பள்ளி மாணவி நீட் தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வினோத் ரத்தினம். அவரது மனைவி இந்து. இருவரும் பல் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இவரது மகள் ஸ்ரீநிகா. இவர் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

அதே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டரில் படித்து நீட் தேர்வு எழுதினார். சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஸ்ரீநிகா 720க்கு, 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார்.

இவர் அகில இந்திய அளவில் 27வது ரேங்க் பெற்றுள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது; நான் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் மிகச்சிறப்பாக தேர்வு எழுதினேன், அதில் 720க்கு 720 மதிப்பெண் பெற்றிருப்பேன். திடீரென்று மறு தேர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் முயற்சி செய்து படித்தேன். தற்போது 700 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.

நான் எம்பிபிஎஸ் முடித்து, எம்.டி. கார்டியாலஜி படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். எனது சகோதரி ஏற்கனவே கிரீன் பார்க் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார் என்று கூறினார்.

கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டர் மாணவன் சபரி 720க்கு 695 மதிப்பெண்கள் பெற்று, பயிற்சி மையத்தில் 2ம் இடமும், மாணவி ஜனனி சுவேதா, மாணவர் ஜெயகிருஷ்ணா ஆகியோர் 720க்க 690 மதிப்பெண்கள் பெற்று, மையத்தில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். இந்த மையத்தில் 35 மாணவ மாணவிகள் 720க்கு 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களை கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரவணன், அகாடமிக் இயக்குனர் சச்சின் சூர்யா மற்றும் இயக்குனர்கள் முதல்வர்கள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top